எங்கே என் புன்னகை

சனி, 10 செப்டம்பர், 2011

மழைகாலம் என்னை ஆக்கிரமித்திருந்த
உன் நினைவுகள்
கூதலான குளிர் பனிக் காலம்
உனக்கான என் காத்திருப்புகள்
கடலோர அலைகள் எழுதும்
கதைகளில் நமக்கான சில அத்தியாயங்கள்
எல்லாம் இருந்தும் நீ இல்லை
ஓர் சொல்லில் உயிர் குடித்தது
கை அசைவில் உணர்வறுத்து
கண்ணோரம் கண்ணீர் தந்து
அதோ நீ போய்விட்டிருந்தாய் 
ஓர் புன்னகைக்கு எரிமலையை பதிலாக தந்தபடி
அதோ நீ போய்விட்டிருந்தாய்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 

வந்து போனோர்....

free counters